Sunday, 5 October 2014

வாய்ப்புண்

வாய்ப்புண் குறைய
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
..............................................
நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
.............................................
திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு கல்வத்தில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி அதில் இடித்த பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்பு அதை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தவேண்டும். காலை ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்கிரந்தி குறையும்.
.......................................................
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
.........................................................
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
..........................................................
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment